மகாவலி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி கங்கைப் படுகையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

 

 

 

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊடாகச் செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

 

மேலும், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அத்திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிங் கங்கை கரையோர மக்களுக்கான அறிவிப்பு

கிங் கங்கையைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை...

நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...