திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவினால் தாக்கப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) அறிவித்துள்ளது.

 

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டி கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர இந்த ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

 

குறித்த ரிட் மனுவானது இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹான்த அபேசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய, இம்மனு தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கிங் கங்கை கரையோர மக்களுக்கான அறிவிப்பு

கிங் கங்கையைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை...

நாவலப்பிட்டியில் பல வீடுகள் நீரில் மூழ்கின

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக...