Breaking இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி; இளைஞர் ருஷ்தி பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர்...

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (07) தடை உத்தரவைப் பிறப்பித்தது.பல அரசியல் கட்சிகள்...

சாமர சம்பத் மீள விளக்கமறியலில்

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

நாமல் CID முன்னிலையில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.   குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி...

தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்

உள்ளூராட்சி மன்றங்கள் 114 இற்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி...

பல பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (7) நண்பகல் 12.12 அளவில்...

தேசிய மக்கள் சக்தி கோசல நுவான் ஜயவீர எம்பி உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தி (NPP) யின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் மாரடைப்பால் 38 வயதில் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது சடலம் கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.