Date:

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மேற்பார்வையின் கீழ் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்னர் இழப்பு ஏற்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த வைத்தியர் சமீபத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பல குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அவற்றில் வெளிப்புற நிறுவனங்களிலிருந்து அறுவை சிகிச்சை உபகரணங்களைப் பெற்று நோயாளிகளுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டும் உள்ளடங்கும்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட சுமார் 77 நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனூடாக பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது இந்த முறைகேடு தொடர்பில் அறிந்தவர்கள் ஆணைக்குழுவின் அவசர தொலைபேசி இலக்கமான 1954 அல்லது ciaboc_gen@ciaboc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல்களை வழங்கலாம் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...