ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில்...

பெண்களே ஜாக்கிரதை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் வீதியில் நடந்து செல்லும் பெண்களின் தங்க சங்கிலிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11,538 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது.

ஐந்து பிரதேச செயலகங்களை உருவாக்க கூறி நுவரெலியாவில் போராட்டம்

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 'கிராம...

“தேசிய வெளிநாட்டுப் பணவனுப்பல் நடமாடும் செயலி” மத்திய வங்கியில் உத்தியோகபூர்வமாக அறிமுகம்

LANKA REMIT என்ற அப்(app) இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் வைத்து நேற்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்குப் பணம் அனுப்பும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்...

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் பிற்போடப்பட்டுள்ளது- நிதி அமைச்சு

மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களது நியமன விடயம் குறித்து பின்பு அவதானம் செலுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கடிதம் மத்திய மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்களை...

மன்னார் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மன்னார், நானாட்டான், மடு, முசலி, மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.   25...

சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் பதற்ற நிலை

சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாடு சங்கத்தினால் இன்று பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள்...