இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40,000 ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 5,000 ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் 12,000 ஹெக்டயார் சதுப்புநிலம் காணப்படுகின்றது.
அதில் 80 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளர்.