Date:

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவில் பரவும் B117 (எல்பா) தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுதலை

பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி(லிப்ட்) பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள்...

506 BYD வாகனங்கள் விடுவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 506 BYD மின்சார வாகனங்கள் சுங்கத்...

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...