Date:

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவில் பரவும் B117 (எல்பா) தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...