Date:

இந்தியாவில் பாரிய அழிவை ஏற்படுத்திய வைரஸ் இலங்கையில் அடையாளம்

இந்தியாவில் பரவி பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ள B.1.617.2  (டெல்டா) என்ற கொரோனா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

இந்தியாவில் பரவும் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த நபர் அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹராம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரித்தானியாவில் பரவும் B117 (எல்பா) தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

அதற்கமைய மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாப்பிட்டி, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமஹராம, கராப்பிட்டிய, ராகம ஆகிய பிரதேசங்களில் இருந்து இவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...