மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
நாட்டில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் காரணமாக தனது பதவியில் இருந்து ராஜபக்ஸ குடும்பம் சற்று தள்ளியிருந்தது.
இருப்பினும், தற்போது மீண்டும் தனது அரசியல் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளதா என்ற கேள்வி எழும்புகின்றது.
அதற்கமைய, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், அவர் ஏற்கனவே பிரதமர் பதவிக்கான சிறப்புரிமைகளை மிகவும் குறைவாகவே அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்பதே அதற்குக் காரணமாகும்.
இன்னொரு தரப்பினர், மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.