வெலிகம – ஹல்லல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 48 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் கொலையை செய்த நபரை பொலிஸார் கைது செய்ததில், அவர் வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.