இலங்கை மக்கள் வங்கியை சீனா கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக, சீன தூதரகத்தை மேற்கோள்காட்டி நியூஸ்பெஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் கடிதம் மற்றும் இரு தரப்பிற்கு இடையிலான உடன்படிக்கைகளின் பிரகாரம், பணம் செலுத்த தவறியதை அடுத்து, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் மக்கள் வங்கி, கருப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானம், வர்த்தக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.