Date:

நாட்டில் வருடாந்தம் 60,000 பேர் பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்!

இன்று உலக பாரிசவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை நிறைவுசெய்ய இடமளியோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பதிவாகும் ஆறில் ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக முக்கிய காரணிகளில் பாரிசவாதமானது 5 ஆவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 13.7 மில்லியன் மக்கள் பாரிசவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5.5 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், நோய் அறிகுறிகள் இனங்காணப்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...