Date:

நாட்டில் மேலும் 43 கொவிட் மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (31) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 1,441 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 43 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 1,484 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம் (31) 4 பேரும், மே 20 – மே 30 வரை 39 பேரும் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 20 – 06 பேர்
மே 21 – ஒருவர்
மே 24 – ஒருவர்
மே 25 – 02 பேர்
மே 26 – 02 பேர்
மே 27 – 06 பேர்
மே 28 – 09 பேர்
மே 29 – 06 பேர்
மே 30 – 07 பேர்
மே 31 – 04 பேர்

இவ்வாறு மரணமடைந்த 43 பேரில், 20 பேர் ஆண்கள், 2 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...

சீன சுவாச நோய் இலங்கையில்?

நாடு முழுவதும் பதிவாகும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சுவாச அமைப்பு தொடர்பான...

காசாவில் சிக்கித் தவித்த 4 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு..! வெளிவிவகார அமைச்சு

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம்...