Date:

அனைத்து விமான நிலையங்களும் இன்று முதல் மீள திறப்பு

இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் இன்று (01) முதல் மீள திறக்கப்பட்டன.

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட இத் தடை உத்தரவு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. எனவே இன்று முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு  அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார். எனினும் இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அம்பிடியே சுமண ரதன தேரர் கைது

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால்...

துமிந்த திசாநாயக்க கைது!

  கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில்...

Neo QLED, OLED, QLED மற்றும் The Frame தொலைக்காட்சிகளுக்கான Vision AI-ஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் Samsung

இலங்கையின் முன்னணி மின்னணு சாதன நிறுவனமான Samsung, 2025ஆம் ஆண்டிற்கான அதிநவீன...

COVID-19 திரிபு பரவும் அபாயம்…

இலங்கையில் தற்போது புதிய COVID-19 திரிபு பரவும் அபாயம் இல்லை என்றும்,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373