குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிறந்தநாள் கேக் வெட்டி, கொண்டாடுவதற்கு அனுமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தின் பணிப்பின் பேரிலேயே இவர், இடமாற்றப்பட்டுள்ளார்.
குருநாகல் மேயர், தன்னுடைய மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவகாரமும். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.