Date:

YMMA திஹாரி கிளையினால் 1000 தென்னங்கன்றுகள் விநியோகம் (Pics)

YMMA திஹாரி கிளையின் ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

CITIGARDENS நிறுவனத்தினால் திஹாரி ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கிளினிக் கட்டட முற்றவெளியில் இந்த இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திஹாரி வை.எம்.எம்.ஏ கிளையின் தலைவர் ஜெசூலி மஹ்ரூப் பரீட்சைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் ஏ.எஸ். மொஹமட் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதிகளான மௌலவி அம்ஜத் (ரஷாதி) மற்றும் மல்வத்த விகாரையின் விஹாராதிபதி  கலட்டுவாவே பஞ்ஞாசர ஸ்தவீர ஆகியோர் தென்னை மர நடுகையின் அவசியத்தை உணர்த்தும் வகையில் சிறப்பான உரையை நிகழ்த்தினர்.

அகில இலங்கை YMMA மாநாட்டின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீட், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ மாநாடு பற்றிய சுருக்கமான சுருக்கமான விளக்கத்தை  வழங்கினார்.

மேலும்  கொவிட் காலத்தின் போது தேசிய அளவிலான திட்டங்களில் இலவச தென்னங்கன்றுகளை வழங்கும்  வேலைத்திட்டமும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்  ஏ.எஸ். முகமது அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்ட தென்னை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர் கபில ஹெட்டியாராச்சி தென்னை மரக்கன்றுகள் எவ்வாறு நடப்பட வேண்டும் என்பதை விளக்கினார்.

அகில இலங்கை YMMA மாநாட்டின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டப் பணிப்பாளர்  நசாரி கமில், மத்திய YMMA (கொழும்பு) செயலாளர்  அப்துல் அலீம் M. நுவைஸ், திஹாரிய YMMA உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சிறுவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்துவைப்பு

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi)...

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக வீரசேன கமகே அவர்கள் இன்று (24) சபாநாயகர்...

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

உமாஓயா பல்நோக்குத்  திட்டத்தைத்  திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸை வாங்க 6 முதலீட்டாளர்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள்...