கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதால் , இலங்கை வங்குரோத்தான நாடல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட காணொளி மூலமாக இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை,அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் , சுற்றுலாத்துறை சார் பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என தெரிவித்தார்.