பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.
ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பஸ் ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் பயணித்த பயணிகள் தனது உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.