சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (21) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அது தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் நிதி மீதான முழு அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம் என்னவெனில் 48 மாதங்களில் இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் அவர்களின் அரசியல் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் உடன்பட்ட வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையெனில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட முடியாத நிலை ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.