சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட் தனது இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.
2020 ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி திறந்தமுறையில் நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருக்கான வாக்கெடுப்பில் ஏ.எம்.எம்.நௌஷாட் 13 வாக்குகளை பெற்றுக்கொண்டதோடு அவரை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் 7 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டார்.