இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா தலைவராகவும், ஹர்திக் பாண்டியா துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமி ஊழியர்களின் பரிந்துரையின் பேரில் பும்ரா தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.