பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் தற்போதைக்கு பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பஸ் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது.
இதேவெளை, தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாத நிலையே காணப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.