Date:

ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை கௌரவித்தார்.

லவ்லினாவுக்கான பரிசுகள் குறித்து முதல்வர் கூறியது:

அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும்.

லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும் ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும்.

லவ்லினாவின் கிராமம் இடம்பெறும் தொகுதியில் குத்துச்சண்டை அகாடமி வசதியுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியில் மாயமான 50 இலட்சம் ரூபா பணம் – பல கோணங்களில் விசாரணை

மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா தொடர்பில் பல...

ICC தடை தொடர்பில் வௌியான புதிய கதை!

இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் சர்ச்சையில் சிக்கிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை...

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – 5 ஆம் திகதி விசாரணை!

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இரண்டு மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண...