Date:

ஒலிம்பிக் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ. 1 கோடி பரிசுத் தொகையும் மாநில காவல் துறையில் டிஎஸ்பி பதவி வழங்கியும் வியாழக்கிழமை கௌரவித்தார்.

லவ்லினாவுக்கான பரிசுகள் குறித்து முதல்வர் கூறியது:

அசாமுக்கு முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று வந்த லவ்லினாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக் 2024 வரை மாதந்தோறும் ரூ. 1 லட்சம் உதவித் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர் பாரிஸில் தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். குவாஹட்டியில் ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும்.

லவ்லினாவின் குத்துச்சண்டை பயணத்தில் அங்கமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங் மற்றும் ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் மக்கள் நன்றியின் வெளிப்பாடாக தலா ரூ. 10 லட்சம் வழங்கி கௌரவிக்கப்படும்.

லவ்லினாவின் கிராமம் இடம்பெறும் தொகுதியில் குத்துச்சண்டை அகாடமி வசதியுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி

நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, கிறைஸ்ட்சர்சில் தொடர்ச்சியாக...

கேக் கொள்வனவு செய்வதை தவிருங்கள்! இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யும் கேக் தொடர்பில் சிக்கல் நிலை தோற்றுவித்துள்ளது. இந்தியாவில்...

PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கம் – குற்றச்சாட்டை மறுக்கும் ஜனக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படுவதற்கு...

சீக்கிய தேசத்தின் கோரிக்கையை நியாயப்படுத்தும் அம்ரித்பால் -காலிஸ்தான் சர்ச்சையின் வரலாறு

அம்ரித்பால் மீது முன்னெப்போதும் இல்லாத அளவு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அந்த சமூகத்தை...