ஆப்கானிஸ்தான் தலைநகருக்கு மூவாயிரம் துருப்புக்களை அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக துருப்பினர்கள் அங்கு அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பிரஜைகளின் இருப்பை குறைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இராஜாந்திர அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரை வெளியேற்றுவதற்காக மூவாயிரம் துருப்பினர் அங்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரச படையினருக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்றுள்ளது.
கந்தஹர் பகுதியில் தற்போது மோதல் அதிகரித்துள்ளது.
அத்துடன் தலிபான்களால் காபூல் நகரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பாதுகாப்பு துருப்பினர் மீது தாக்குதல் நடத்தப்படுமாயின் அதற்கான பதில் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதுரகம் உள்ளிட்ட இராஜதந்திர பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக 650 அமெரிக்க துருப்பினர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.