அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பவள விழா (75வது ஆண்டு நிறைவு) நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி காலை 8.30 மணி முதல் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.
அகில இலங்கை ரீதியில் 25 வருடங்களுக்கும் மேலாக அஹதிய்யா பாடசாலைகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 220 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.
அதனடிப்படையில் களுத்துறை மாவட்ட அஹதிய்யா தஹம் சம்மேளனத்தின் கீழ் செயற்படுகின்ற சுமார் 11 அஹதிய்யா பாடசலையிலுருந்து 24 ஆசிரியர்கள் இதன்போது கெளரவிக்கப்படவுள்ளனர்.
அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.!
இறைவன் உங்கள் சேவைகளை பொறுந்திக்கொள்வானாக…ஆமீன்..!


