மகாவலி கங்கையில் நீராடச் சென்ற மாணவன் மாயம்

கம்பளை நகரிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன், கம்பளை – உடோவிட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவலி கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக கம்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வாறு மாயமானவர் உடோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த கம்பளை கங்கசிரிபுர கங்கசிரிபுர வித்யாலயத்தில் கல்வி பயிலும் கல்பித கரசிங்க என்ற மாணவனாவார்.

 

தற்போது பாடசாலையில் நடைபெற்று வரும் தவணைப் பரீட்சை முடிந்ததும் (வீட்டிற்கு) வந்த இம்மாணவன், கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து இவ்வாறு கங்கைக்குச் சென்றுள்ளார்.

 

இவர்கள் நீராடிய இடத்தில் மணல் அகழப்பட்டதால் பல அடி ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் நீர்ரோட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக...

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு - தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் இன்று மாலை (23) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகக். போலீஸ்...