சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்யத் தடை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களில் (Sanitary Napkins) ‘SLS’ தரச்சான்றிதழ் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, SLS தரச்சான்றிதழ் இல்லாத உள்நாட்டு சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், போக்குவரத்து செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு 2026 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12 (2) ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் ‘SLS’ தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்ட தயாரிப்புகளை மட்டுமே இனி சந்தையில் விற்பனை செய்ய முடியும்.

இந்த உத்தரவானது குறிப்பாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகை தயாரிப்புகளுக்கும் பொருந்தும்:

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் (SLS 1732).

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மெல்லிய சானிட்டரி நாப்கின்கள் (SLS 1748).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

தொடர் பணிப்புறக்கணிப்பிற்கு செல்ல தயாராகும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்

இலங்கைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. அச்சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது...

முன்னாள் எம்.பியின் மனைவி மாடியிலிருந்து விழுந்து பலி

மொனராகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி டேஷானி குணரத்ன திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தணமல்வில பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் அவர்...