ஜோர்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரு அமெரிக்க சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த இரு சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர் . இவர்களது மரணத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இத்தாக்குதல்களில் அமெரிக்க இராணுவ சேவையைச் சேர்ந்த மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.


