நியூசிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் பராமரிப்பாளராகப் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த நபரொருவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நிலுஷன் ஜயங்க சில்வா கிந்தோட்டா விதானகே என்ற இந்த இலங்கை நபருக்கு முதியவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும், இரு முதிய பெண்களுடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு கொண்ட இரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.


