டயகம சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டயகம 3 ஆம் பிரிவை சேர்ந்த ஜூட்குமார் ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டுக்கு வேலைக்காகச் சென்ற நிலையில் கடந்த 15 ஆம் திகதி எரிகாயங்களுடன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்திற்கு எதிராக மலையகத்தின் பல பகுதிகளிலும் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டன் மெத்தடிஸ் சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் ஜனாதிபதியிடம் மஹஜர் ஒன்றை கையளிப்பதற்காக நேற்று மாலை கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டனர்.
டன்பார் வீதியில் ஹட்டன் ஹைலன்ட் கல்லூரிக்கு அருகாமையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.