2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, குறித்த பரீட்சையை 2022 பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முதல் மார்ச் 03ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.