தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் 14 பேர் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், அவர்களுக்கு வெளிநாட்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தின் போது கடலில் இருந்து பெறப்பட்ட நீர் உள்ளிட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.