எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள்
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க கடந்த தினம் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.