Date:

வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கங்காராம விகாரைக்குச்சென்று வழிபடுவதே வழமை. எனினும், வழமைக்கு மாறாக இம்முறை ரணில் செயற்பட்டுள்ளார்.

நல்லாட்சியை விரட்டி, ராஜபக்ச ஆட்சியை கொண்டுவருவதற்கு பாடுபட்ட தேரர்களில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரும் ஒருவர். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றார்.

இந்நிலையில் அவரை ரணில் சந்தித்து ஆசிபெற்றமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கதை அடிபடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்படும்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில்...

கொழும்பு துறைமுகத்தில் சிக்கியிருக்கும் 115 உணவுக் கொள்கலன்கள் வீணாகும் அபாயம்

கொழும்பு துறைமுகத்தில் உணவுப் பொருட்கள் அடங்கிய 115 கொள்கலன்களில் உள்ள பொருட்கள்...

இலங்கையில் பணிபுரியும் பெண்களை தாக்கும் ஆபத்து

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்...