Date:

வழமைக்கு மாறாக செயற்பட்ட ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நேரடியாக அபயராம விகாரைக்குச்சென்று விகாராதிபதி, முறுந்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஆசிபெற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய பதவிகளை வகித்த சந்தர்ப்பங்களிலெல்லாம், கங்காராம விகாரைக்குச்சென்று வழிபடுவதே வழமை. எனினும், வழமைக்கு மாறாக இம்முறை ரணில் செயற்பட்டுள்ளார்.

நல்லாட்சியை விரட்டி, ராஜபக்ச ஆட்சியை கொண்டுவருவதற்கு பாடுபட்ட தேரர்களில் முறுத்தெட்டுவ ஆனந்த தேரரும் ஒருவர். தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை அவர் வெளிப்படையாகவே விமர்சித்துவருகின்றார்.

இந்நிலையில் அவரை ரணில் சந்தித்து ஆசிபெற்றமை குறித்து அரசியல் களத்தில் பலகோணங்களில் கதை அடிபடுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஜூன் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட...

22 மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் இதோ!

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளுராட்சி...

புதிய கொவிட்-19 மாறுபாடு; பொதுமக்கள் முடிந்தவரை சுகாதார பாதுகாப்பு…

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில்...

தடம்புரண்ட இரவு தபால் ரயில்..| போக்குவரத்து பாதிப்பு!

கலபொட ரயில் நிலையம் அருகே ரயிலொன்று தடம்புரண்டதால் , மலையக ரயில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373