போரளை மெகசின் சிறைச்சாலையின் E வார்டில் இன்று (06) இரவு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலைமை தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மெகசின் சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


