மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்கைதிகளின் அமைதியற்ற மற்றும் கலவரமான சூழ்நிலை காரணமாக, சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பல சொத்துகளுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் உருவாக்கப்பட்ட கலவரமான மற்றும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அங்குள்ள சொத்துகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், கைதிகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய பல ஆவணங்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதாகச் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மஹர சிறைச்சாலை மருத்துவமனை கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், அங்கு இருந்த பல மருந்துப் பொருட்களும் அழிவடைந்துள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.



