கம்பளை நகரிலுள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன், கம்பளை – உடோவிட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவலி கங்கையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதாக கம்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மாயமானவர் உடோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த கம்பளை கங்கசிரிபுர கங்கசிரிபுர வித்யாலயத்தில் கல்வி பயிலும் கல்பித கரசிங்க என்ற மாணவனாவார்.
தற்போது பாடசாலையில் நடைபெற்று வரும் தவணைப் பரீட்சை முடிந்ததும் (வீட்டிற்கு) வந்த இம்மாணவன், கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து இவ்வாறு கங்கைக்குச் சென்றுள்ளார்.
இவர்கள் நீராடிய இடத்தில் மணல் அகழப்பட்டதால் பல அடி ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் நீர்ரோட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்


