Date:

வெளியே பணம் அனுப்புபவர்களுக்கு வரி விதித்த ட்ரம்ப்!

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கும் ஏனைய நாடுகளுக்கும் பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ‘கிறீன்காட்’ (நிரந்தர குடியுரிமை) பெற்றவா்கள், ‘எச்1பி’ மற்றும் ‘எச்-2ஏ’ போன்ற தற்காலிக நுழைவு விசாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், தங்களின் சொந்த நாடு உட்பட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் இந்த வரி விதிக்கப்பட உள்ளது.

இந்த வரி அமெரிக்கர்கள் மேற்கொள்ளும் எந்த வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வரி, அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கான செலவைக் கணிசமாக உயா்த்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...