Date:

உப்பு இறக்குமதி தொடர்பில் மற்றுமொரு மகிழ்ச்சியான கட்டம்…!

உப்பு இறக்குமதிக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.

எனவே உப்பு இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் தேவையில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதிப் பெற்ற எந்தவொரு இறக்கமதியாளரும் உப்பை இறக்குமதி செய்ய முடியும் என உபுல்மலீ பிரேமதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் அயடீன் கலக்காத மற்றும் தூள் உப்பை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உணவுக்கு பயன்படுத்தப்படும் 250 மெற்றிக் தொன் தூள் உப்பு இன்று செவ்வாய்க்கிழமை (20) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வரத்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

18 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக IPL கிண்ணத்தை கைப்பற்றிய RCB !

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக...

நாட்டை வந்தடைந்தது தேங்காய் பால் கப்பல்…!

தேங்காய் சார்ந்த தொழில்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் மூலப்பொருள் இறக்குமதி...

மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம்.யு. ஹேமபால...

மனைவியின் உடலிலிருந்து வெட்டப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் வந்த கணவன்!

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373