Date:

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார்.

அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.  குறித்த நபரை கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே, உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம் அட்டை மீள் பதிவு: அமைச்சரவை அனுமதி!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர்...

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக,...

நெதர்லாந்து அணி அபார வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் நமீபியா...

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...