Date:

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்கப்படும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

கடந்த 23ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவு காரணமாக கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

 

 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலின் பேரில், பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

 

 

தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக ஆர். சிறீதர்

இலங்கையின் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் முடிவு...

குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்

பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்

மலையகப் பகுதிகளில் ஏற்படவிருக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை குறித்து  தேசிய கட்டிட...

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் டிஜிட்டல் புரட்சி

அரசாங்கத்தின் "டிஜிட்டல் இலங்கை" தேசிய கொள்கைக்கு அமைவாக, முஸ்லிம் சமய பண்பாட்டு...