Date:

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தேசிய நீர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் சமூக நல செயற்றிட்டமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் நேற்றையதினம்(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் விநியோகக் குழாயினை கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், மக்கள் பாவனைக்காக திறந்து வைத்ததுடன் புதிய நீர் விநியோகக் குழாய் பதிப்பு நிர்மாண வேலையையும் இராஜாங்க அமைச்சர் இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாவமைப்புச் சபையின் வடக்கு/வடமத்திய மாகாண மேலதிக பொது முகாமையாளர் தி.பாரதிதாசனின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள் , கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜெயக்குமார் ராசஜோகினி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...