ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று(29) அதிகாலை 5.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம்
வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் இன்று(29) அதிகாலை 5.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவான இந்நிலநடுக்கம் பூமிக்கு 110 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று(28) அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.