Date:

காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜ் கைதுக்கு சர்வதேசம் கண்டனம்

கடந்த மார்ச் 20 திகதி காஷ்மீர் ஊடகவியலாளர் இர்பான் மெராஜை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்த போது இது வரையில் இர்பான் மெராஜை விடுதலை செய்யாது தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் மேரி லாலர், மெராஜ் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலையை தனது ட்வீட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தியா மற்றும் காஷ்மீர் பத்திரிகையாளர் கூட்டமைப்பு ஆகியவையும் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளன.

இதேவேளை, “இர்பான் மெராஜ் போன்ற மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக துன்புறுத்தப்படக்கூடாது” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் வாரியத் தலைவர் ஆகர் படேல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...