மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடப பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மொடர்னா கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றும் நெனோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவும் சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.