Date:

ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நாளை (23) ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது இதனிடையே டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக...

இரும்பின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் இரும்பின் விலை சுமார் 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையினால்...