Date:

இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டம்

மின்சார  வாகனங்களின்  பயன்பாட்டை  ஊக்குவிப்பதற்கான  மூலோபாய திட்டத்திற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

60 சதவீத காற்று மாசுபாடு  வாகனங்களில் இருந்து  வெளியாகும் புகைகளினால்  ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம், மற்றும் பிற நிறுவனங்கள்  மேற்கொண்ட  பல ஆராய்ச்சிகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பாவனையில் உள்ள வாகனங்களில் கணிசமானவை  10 ஆண்டுகளுக்கு   மேலானவை. இதுபோன்ற பழைய வாகனங்கள்  முறையாக  பராமரிக்காத காரணத்தினால்  விஷ வாயு வெளியேற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்  தரவின் படி 2020ஆம் ஆண்டு இறுதியில்  பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை  8 மில்லியனை கடந்துள்ளது. ஆகவே வளி மாசடைவதை தடுப்பதற்கு  மின்சார வாகனங்களின்  பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு   சுற்றாடற்துறை அமைச்சு முன்வைத்த யோசனைக்கு  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை துப்பாக்கிச் சூடு: மங்களவின் செயலாளருக்கு காயம்

கந்தானை பொதுச் சந்தைக்கு முன்பாக வியாழக்கிழமை (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்...

மத்திய அமைச்சரவையில் மாற்றம்? அமைச்சராகும் அண்ணாமலை

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள...

மேர்வின் சில்வா உள்ளிட்டோருக்கு பிணை

சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் இன்று உத்தரவுகளை மதிக்கத் தவறியதற்காக பொலிஸார் துப்பாக்கிச்...