கொவிட் தொற்று காரணமாக செய்ய முடியாமல் தவறி போன வேலைகளை சரிவர செய்வதற்காக ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்த கருத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான இரகசிய உடன்படிக்கையாகும் என முற்போக்கு ஆதரவு எம்.பி.க்கள் குழுவிற்கு இடையில் இரகசிய உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு பாரிய அனுகூலம் கிடைக்கும் என்றும், அந்த முடிவுகள் ஜே.வி.பி.க்கு வேறு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலமாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காணும் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையினால் மிகவும் வருத்தமடைந்துள்ளதுடன், அரசாங்கத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க பசில் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என தனது நெருங்கிய சகாக்கள் இருவரிடம் கூறியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
ஜே.வி.பி அரசாங்கத்தை அமைத்தால், தன்னால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என சஜித் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் தெரிவித்துள்ளதாகவும் இரண்டு எம்.பி.க்களில் ஒருவர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயம் கசிந்தால் எமது அரசியல் வாழ்க்கை அடியோடு முடிந்து விடும் எனவும் தெரிவித்தாகவும் கூறப்படுகின்றது