தீப்பிடித்த எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
அதற்கமைய, ரூ. 20 மில்லியன் ரொக்கம் கொண்ட தனிப்பட்ட பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டார்.